சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் மன்சூரலிகான் அளித்த ஒரு பேட்டியில் நடிகைகள் த்ரிஷா, குஷ்பு, ரோஜா ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பேசியிருந்தார். இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. குறிப்பாக தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து இந்த விவகாரத்தில் தான் பேசிய முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக நடிகைகள் த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர அனுமதி கேட்டு மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கிலும் மனு செய்துள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்து, மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தது.
இதை மறு ஆய்வு செய்யக் கோரி மன்சூர் அலிகான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. மன்சூரலிகான் தரப்பு கருத்தை கேட்ட நீதிமன்றம் மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்த உத்தரவு மட்டும் ரத்து செய்யப்படுகிறது. மனு தள்ளுபடி உறுதி செய்யப்படுகிறது, என்று தீர்ப்பளித்தது.
மன்சூரலிகானுக்கு நீதிமன்றம் தெரிவித்த கண்டனம் நீதிமன்ற பதிவேட்டில் தொடர்ந்து இருக்கும், இனி இதுபோன்று தேவையற்ற வழக்கு தொடர்ந்தால் அப்போது இந்த கண்டனம் கவனத்தில் கொள்ளபப்படும் என்று வழக்கறிஞர்கள் தரப்பில் கூறப்படுகிறது.