மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கவுதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் அறிமுகமானவர் சமந்தா. அந்த படத்தில் சிறிய வேடத்தில் நடித்தவரை அப்படத்தின் தெலுங்கு பதிப்பில் ஹீரோயினாக நடிக்க வைத்தார் கவுதம் மேனன். இந்த நிலையில், விண்ணைத்தாண்டி வருவாயா படம் வெளியாகி பிப்ரவரி 26ம் தேதியான இன்றோடு 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதனால், சமந்தா திரையுலகிற்கு வந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அவரது ரசிகர்கள் சோசியல் மீடியாவில் டிரெண்டிங் செய்து கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்த நடிகை நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அவருக்கு ஒரு வாழ்த்து தெரிவித்திருக்கிறார், அதில், 14 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்கள், உங்களுக்கு(சமந்தா) நிறைய ஆற்றல் கிடைக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார். அதற்கு, நன்றி என் அழகியே என பதில் கொடுத்திருக்கிறார் சமந்தா.