300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
‛நானும் ரவுடி தான்' படம் உருவான சமயத்தில் விக்னேஷ் சிவன், நயன்தாரா இடையே காதலர் மலர்ந்தது. பல ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் 2022ல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். குழந்தைகளுக்கு உயிர், உலக் என பெயரிட்டுள்ளனர்.
காதலர் தினத்தை உலகெங்கும் உள்ள காதலர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். விக்னேஷ் சிவன் காதலர் தினத்தில் வெளியிட்ட பதிவில், ‛‛என் தங்கத்துடன் ஒரு சகாப்தத்தை முடித்து விட்டேன். நீ என் உயிராகவும், நான் என் உலகமாகவும் இருந்த நிலையில் தற்போது நமக்கு உயிர் மற்றும் உலக் கிடைத்துள்ளனர். ஒவ்வொரு காதலர்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்'' என குறிப்பிட்டு நயன்தாரா மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.
அதேப்போல் நயன்தாரா தனது குழந்தைகளுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து காதலர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.