நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? | காக்கா கழுகு போய்... கழுதை கதை சொன்ன ரஜினி : ‛வேட்டையன்' இசை வெளியீட்டில் சுவாரஸ்யம் | மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! |
பொங்கலுக்கு வெளியான படங்களில் நேரடியாக போட்டியில் இருந்த படங்கள் 'அயலான், கேப்டன் மில்லர்'. இரண்டு படங்களில் எந்தப் படம் சிறப்பாக இருந்தது, எது வசூலைக் குவித்தது என சிவகார்த்திகேயன், தனுஷ் ரசிகர்கள் படம் வெளியான பின் சமூக வலைத்தளங்களில் ஒருவர் மீது மற்றவர் கமெண்ட் செய்து சண்டையிட்டு வந்தார்கள்.
தியேட்டர் வெளியீட்டில் ஏற்பட்ட போட்டி, இப்போது ஓடிடி தளத்திலும் வரப் போகிறது. இரண்டு படங்களுமே நாளை(பிப்., 9) ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளது. 'கேப்டன் மில்லர்' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 'அயலான்' படம் எத்தனை மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறித்து சரியாக அறிவிக்கப்படவில்லை. தமிழில் மட்டும் வெளியாகிறது என்பது மட்டும் உறுதி.
'அயலான்' படம் சில சட்டச் சிக்கல்கள் காரணமாக தெலுங்கில் இதுவரை வெளியாகவில்லை. ஜனவரி 26ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு திடீரென தள்ளி வைக்கப்பட்டது. அதற்கான காரணத்தைக் கூட தயாரிப்பு நிறுவனம் சொல்லவில்லை.
தெலுங்கில் உள்ள சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஓடிடியில் படம் நேரடியாக வெளியாகுமா என்று கேட்டு வருகிறார்கள். அதற்கு படக்குழுவினர் கூட எந்தவித பதிலையும் சொல்லவில்லை. தெலுங்கில் 'அயலான்' படத்திற்கு வெளியீட்டிற்கு முன்பு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. டிரைலருக்கு 5 மில்லியன் பார்வைகள் கிடைத்தது. அப்படிப்பட்ட வரவேற்பை வசூலாக மாற்ற படக்குழு தவறிவிட்டது.