சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

பொங்கலுக்கு வெளியான படங்களில் நேரடியாக போட்டியில் இருந்த படங்கள் 'அயலான், கேப்டன் மில்லர்'. இரண்டு படங்களில் எந்தப் படம் சிறப்பாக இருந்தது, எது வசூலைக் குவித்தது என சிவகார்த்திகேயன், தனுஷ் ரசிகர்கள் படம் வெளியான பின் சமூக வலைத்தளங்களில் ஒருவர் மீது மற்றவர் கமெண்ட் செய்து சண்டையிட்டு வந்தார்கள்.
தியேட்டர் வெளியீட்டில் ஏற்பட்ட போட்டி, இப்போது ஓடிடி தளத்திலும் வரப் போகிறது. இரண்டு படங்களுமே நாளை(பிப்., 9) ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளது. 'கேப்டன் மில்லர்' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 'அயலான்' படம் எத்தனை மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறித்து சரியாக அறிவிக்கப்படவில்லை. தமிழில் மட்டும் வெளியாகிறது என்பது மட்டும் உறுதி.
'அயலான்' படம் சில சட்டச் சிக்கல்கள் காரணமாக தெலுங்கில் இதுவரை வெளியாகவில்லை. ஜனவரி 26ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு திடீரென தள்ளி வைக்கப்பட்டது. அதற்கான காரணத்தைக் கூட தயாரிப்பு நிறுவனம் சொல்லவில்லை.
தெலுங்கில் உள்ள சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஓடிடியில் படம் நேரடியாக வெளியாகுமா என்று கேட்டு வருகிறார்கள். அதற்கு படக்குழுவினர் கூட எந்தவித பதிலையும் சொல்லவில்லை. தெலுங்கில் 'அயலான்' படத்திற்கு வெளியீட்டிற்கு முன்பு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. டிரைலருக்கு 5 மில்லியன் பார்வைகள் கிடைத்தது. அப்படிப்பட்ட வரவேற்பை வசூலாக மாற்ற படக்குழு தவறிவிட்டது.




