மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் சிரஞ்சீவி. ஆந்திர அரசியலில் குதிக்க நினைத்த சிரஞ்சீவி 2008ம் ஆண்டு 'பிரஜா ராஜ்யம்' என்ற கட்சியை தொடங்கினார். ஒன்றுபட்ட ஆந்திராவின் அடுத்த முதல்வர் அவர் என்று கணிக்கப்பட்ட நிலையில் 2009ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெறும் 18 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று பெரும் தோல்வியை சந்தித்தார். அதன் பிறகு தேசிய அரசியலில் கவனம் செலுத்திய சிரஞ்சீவி, தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார்.
2012ம் ஆண்டு மத்திய சுற்றுலாத்துறை இணை அமைச்சர் ஆனார். அதற்கு பிறகு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்ததும் அரசியலில் இருந்து விலகினார் சிரஞ்சீவி. இனி சினிமாவில் கவனம் செலுத்தப்போவதாக அறிவித்தவர் மளமளவென படங்களில் நடித்தார். ஆனால் ஒரு சில படங்கள் தவிர பெரும்பாலான படங்கள் தோல்வியை சந்தித்தன.
இந்த நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் பாரதிய ஜனதா இரு மாநிலங்களுக்குமான ஒரு நட்சத்திர தலைவரை தேடி கொண்டிருந்தது. தற்போது அது குறிவைத்திருப்பது சிரஞ்சீவிக்கு. ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கானாவில் காங்கிரஸ் இருவரை எதிர்க்க தகுதியான ஒருவராக சிரஞ்சீவியை பார்க்கிறது. ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் சிறப்பு அழைப்பு, பத்மவிபூஷன் விருது என சிரஞ்சீவியும் பாரதிய ஜனதா கட்சிக்கு நெருக்கமாகிறார். விரைவில் அவர் உத்தர பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
வருகிற பார்லிமென்ட் தேர்தலுக்கு முன்பாகவே சிரஞ்சீவி பாரதி ஜனதா கட்சியில் தன்னை இணைத்து கொள்வார் என்றும், ஆந்திர மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக நியமிக்கப்படுவார் என்றும் ஆந்திர மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுபற்றி சிரஞ்சீவி தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.