நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் பண்முக திறமைகளை கொண்ட நடிகர். தனது 50வது படத்தை இயக்கி, நடித்து முடித்துள்ளார். தற்போது மூன்றாவதாக ‛நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படம் இன்றைய இளைஞர்களின் காதலை மையப்படுத்தி உருவாகிறது. இதுதவிர சேகர் கம்முலா இயக்கும் தனது 51வது படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று திடீரென சமூக வலைதளத்தில் தனுஷ் அடுத்து இயக்கி வரும் படத்தில் நடிப்பதற்காக ஆடிசன் நடைபெற உள்ளதாக பரவியது. இதனைத்தொடர்ந்து தனுஷின் மேலாளர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "தனுஷ் சாரின் புதிய படத்தில் நடிப்பதற்காக நடிகர், நடிகைகள் தேவைப்படுகிறது இதற்கு தொடர்பு கொள்ள என் பெயர், மொபைல் நம்பர் என சமூக வலைதளங்களில் பரவியது உண்மை அல்ல முற்றிலும் பொய். இதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்" என பதிவிட்டுள்ளார்.