ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் தனது 51வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தற்காலிகமாக DNS என அழைக்கின்றனர். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நாகார்ஜூனா நடிக்கின்றார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார்.
இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக ஆந்திராவில் நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகிறது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் இப்படத்திற்கு 'தாராவி' என தலைப்பு வைத்ததாக தகவல் பரவி வந்தது. இப்போது கிடைத்த தகவலின் படி, இதுவரை இந்த படத்திற்கு எந்த தலைப்பும் வைக்கவில்லை என படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் நடந்தது. அப்போது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டதாக சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில் இன்று திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார் நடிகர் தனுஷ்.