பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் | 'சாமி, திருப்பாச்சி' புகழ் நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் | 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் |
எண்பதுகளின் இறுதியில் கங்கை அமரன் இயக்கிய 'எங்க ஊரு பாட்டுக்காரன்' என்கிற படத்தில் நடிகர் ராமராஜனுக்கு ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நிஷாந்தி என்கிற சாந்தி பிரியா. நடிகை பானுப்ரியாவின் சகோதரியான இவர் சில வருடங்கள் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரை உலகில் ஒரு ரவுண்டு வந்தார். ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு ஒதுங்கினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது அவர் இந்தியாவின் நைட்டிங்கேல் என போற்றப்படும் டாக்டர் சரோஜினி நாயுடு அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் படத்தில் சரோஜினி நாயுடு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் தாராவி பேங்க் என்கிற வெப் சீரிஸிலும் நடித்தார்.
இந்த நிலையில் தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார் சாந்தி பிரியா. வர்ஷா பரத் என்பவர் இயக்கும் இந்த படம் 25 வயதிலிருந்து 55 வயது வரையிலான ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது. “பொதுவாக முன்னாள் கதாநாயகிகள் மீண்டும் நடிப்பதற்காக வரும்போது அவர்களுக்கு அம்மா, அக்கா, அண்ணி கதாபாத்திரங்கள் தான் கிடைப்பது வழக்கம். ஆனால் எனக்கு இந்த படத்தில் கதையின் நாயகியாக நடிப்பதற்காக வாய்ப்பு தேடி வந்ததால் மறுக்காமல் ஒப்புக்கொண்டேன்” என்று கூறியுள்ளார் சாந்தி பிரியா.