அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜன., 22ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். விழாவை முடித்துவிட்டு திரும்பிய ரஜினி சென்னை, விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி :
‛‛ராமர் கோயில் திறந்த பின்னர் அதை பார்த்த முதல் 150 பேர்களில் நானும் ஒருவன் என்பது சந்தோஷமாக உள்ளது. என்னை பொருத்தவரை இது ஆன்மிக நிகழ்வு'' என்றார்.
ராமர் கோயில் கும்பாபிஷேகம் மத அரசியல் நிகழ்வா என்ற கேள்விக்கு.... ‛‛ஒவ்வொருவரின் பார்வையும் ஒவ்வொரு விதமாக இருக்கும். எல்லோரின் பார்வையும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொருவரின் கருத்து அவர்களின் சொந்த கருத்து. நான் இதை ஆன்மிக நிகழ்வாக மட்டுமே பார்க்கிறேன்'' என்றார்.