நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜன., 22ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். விழாவை முடித்துவிட்டு திரும்பிய ரஜினி சென்னை, விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி :
‛‛ராமர் கோயில் திறந்த பின்னர் அதை பார்த்த முதல் 150 பேர்களில் நானும் ஒருவன் என்பது சந்தோஷமாக உள்ளது. என்னை பொருத்தவரை இது ஆன்மிக நிகழ்வு'' என்றார்.
ராமர் கோயில் கும்பாபிஷேகம் மத அரசியல் நிகழ்வா என்ற கேள்விக்கு.... ‛‛ஒவ்வொருவரின் பார்வையும் ஒவ்வொரு விதமாக இருக்கும். எல்லோரின் பார்வையும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொருவரின் கருத்து அவர்களின் சொந்த கருத்து. நான் இதை ஆன்மிக நிகழ்வாக மட்டுமே பார்க்கிறேன்'' என்றார்.