நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிக்க கன்னடத்தில் தயாரான 'கேஜிஎப்' படத்தின் இரண்டு பாகங்களும் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அந்த இரண்டு படங்களும் தியேட்டர்களிலும், ஓடிடி தளங்களிலும், டிவியிலும் அதிகம் ரசிக்கப்பட்ட படங்கள். அந்தப் படத்தைப் பற்றி பலரும் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிடும் அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்தியவை.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் அடுத்து வெளிவந்த 'சலார்' படம் 'கேஜிஎப்' படத்தின் இரண்டு பாகங்கள் ஏற்படுத்திய பரபரப்பை சிறிது கூட ஏற்படுத்தவில்லை. தமிழ் ரசிகர்களிடம் அப்படம் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. 'கேஜிஎப்' சாயலிலேயே 'சலார்' படத்தை எடுத்திருந்தார் பிரசாந்த் நீல் என்பதுதான் பலரது விமர்சனங்களில் காணப்பட்டது.
தமிழகத்தில் மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகாவிலும் இப்படம் வியாபார ரீதியாக பெரிய வசூலைக் குவிக்க முடியாமல் போனது. தெலுங்கு மாநிலங்களில் மட்டும்தான் படத்திற்கு வரவேற்பும், வசூலும் கிடைத்தது.
'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடித்து வெளிவந்த பான் இந்தியா படங்களான 'சாஹோ, ராதே ஷ்யாம், ஆதி புருஷ்,' ஆகிய படங்கள் தமிழில் வரவேற்பையோ, வசூலையோ பெறவில்லை. அந்த வரிசையில் 'சலார்' படமும் சேர்ந்துவிட்டது. அவரது நடிப்பில் அடுத்து வர உள்ள'கல்கி 2898 எடி' படமாவது அதை மாற்றுமா ?.