'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

ரஜினிகாந்த் தற்போது 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை 'ஜெய்பீம்' படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்குகிறார். போலீ என்கவுண்டர் பற்றிய படமாக தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
திருவனந்தபுரத்தில் தொடங்கி மும்பை, சென்னை, திருநெல்வெலி, நாகர்கோவில், உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது கன்னியாகுமரியில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி சென்ற ரஜினிகாந்த், விஜயகாந்த் மரணத்தால் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பி விட்டார்.
இந்த நிலையில் ரஜினிகாந்த், பகத் பாசிலுடன் நடிக்கும் காட்சிகள் லீக் ஆகியுள்ளது. இதனால் படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். படக்காட்சிகள் வெளியாகாமல் இருக்க செல்போனுக்கு தடை விதித்துள்ளனர். வெளியாட்களையும் உள்ளே அனுமதிக்கவில்லை. ஆனால் பாதுகாப்பையும் மீறி கன்னியாகுமரியில் ரஜினிகாந்த், பகத் பாசில் ஆகியோர் பங்கேற்று நடித்த காட்சி இணைய தளத்தில் கசிந்துள்ளது. படக்காட்சியை கசிய விட்டது யார் என்று விசாரணை நடக்கிறது.