நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
மறைந்த நடிகரும், தேமுதிக., தவைலருமான விஜயகாந்த் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தூத்துக்குடியில் படப்பிடிப்பில் இருந்த ரஜினிகாந்த், விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டதும் படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பினார். இன்று(டிச., 29) தீவுத்திடலில் வைக்கப்பட்ட விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் ரஜினி. தொடர்ந்து அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பொருத்தமான ‛கேப்டன்' பெயர்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ‛‛நடிகர் விஜயகாந்த்தை இழந்தது துரதிருஷ்டவசமானது. ஒரு முறை விஜயகாந்த் உடன் பழகினால் அவரது அன்புக்கு அனைவரும் அடிமையாகிவிடுவார்கள். நட்புக்கு இலக்கணமானவர். கேப்டன் என்ற பெயர் அவருக்கு பொருத்தமானது. சினிமாகாரர்கள் மீது கோபப்படுவார். ஆனால் அவர் மீது யாருக்கும் கோபம் வராது. விஜயகாந்த் கோபத்திற்கு பின்னால் ஒரு நியாயமான காரணம் இருக்கும், சுயநலம் இருக்காது. நான் மருத்துவமனையில் இருந்தபோது தொந்தரவாக இருந்த கூட்டத்தை 5 நிமிடத்தில் விரட்டி அடித்தவர் விஜயகாந்த். மலேசியா கலை நிகழ்ச்சியில் கூட்டத்தில் சிக்கியபோது களத்தில் இறங்கி என்னை பூ போல் அங்கிருந்து கூட்டி வந்தவர் விஜயகாந்த். வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்களின் மனதில் யார் என்றால் அது விஜயகாந்த் தான். வாழ்க விஜயகாந்த் நாமம்.
தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார்
முன்னதாக தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் : ‛‛அன்பு நண்பர் விஜயகாந்தை இழந்தது மிகப்பெரிய துரதிர்ஷ்டம். மனதுக்கு கஷ்டமாக உள்ளது. அசாத்தியமான மனவுறுதி கொண்ட மனிதர் அவர். எப்படியாவது உடல்நிலை தேறி வந்துவிடுவார்னு என அனைவரும் நினைத்தோம். சமீபத்தில் நடைபெற்ற தேமுதிக பொதுக்குழுவில் அவர் சோர்வாக இருந்ததை பார்த்தபோது, எனக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது, வருந்தினேன். விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார். தமிழ் மக்களுக்கு நிறைய நல்லது செய்திருப்பார். அந்த பாக்கியத்தை தமிழக மக்கள் இழந்திருக்கிறோம்'' என்றார்.