ஜானி டெப்புக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது | ஆஸ்கர் விருது: ஆறு தமிழ் படங்கள் உட்பட 29 இந்திய படங்கள் பரிந்துரை | 'புஷ்பா 2' ரிலீஸ், மீண்டும் உறுதி செய்த படக்குழு | பிளாஷ்பேக் : 10 வேடங்களில் நடித்த முதல் நடிகர் | ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் செய்த ரகளை! தேவரா படவிழா ரத்து!! | யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்! - இயக்குனர் ஷங்கர் எச்சரிக்கை | சுயமரியாதை முக்கியம்... என்னிடம் மன்னிப்பு கேளுங்க : விஜய் படம் குறித்த வதந்திக்கு சிம்ரன் கடும் பதிலடி | எல்லை மீறும் இளசுகள்: தீயாய் பரவும் திரிஷா 'ஏஐ' வீடியோ | பிளாஷ்பேக் : குழந்தையாக வந்தார், சிறுமியாக மறைந்தார் : மின்னி மறைந்த ஷோபா வாழ்க்கை | கதையின் நாயகனாக விநாயகன் ; வில்லனாக மம்முட்டி |
மறைந்த நடிகரும், தேமுதிக., தவைலருமான விஜயகாந்த் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தூத்துக்குடியில் படப்பிடிப்பில் இருந்த ரஜினிகாந்த், விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டதும் படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பினார். இன்று(டிச., 29) தீவுத்திடலில் வைக்கப்பட்ட விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் ரஜினி. தொடர்ந்து அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பொருத்தமான ‛கேப்டன்' பெயர்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ‛‛நடிகர் விஜயகாந்த்தை இழந்தது துரதிருஷ்டவசமானது. ஒரு முறை விஜயகாந்த் உடன் பழகினால் அவரது அன்புக்கு அனைவரும் அடிமையாகிவிடுவார்கள். நட்புக்கு இலக்கணமானவர். கேப்டன் என்ற பெயர் அவருக்கு பொருத்தமானது. சினிமாகாரர்கள் மீது கோபப்படுவார். ஆனால் அவர் மீது யாருக்கும் கோபம் வராது. விஜயகாந்த் கோபத்திற்கு பின்னால் ஒரு நியாயமான காரணம் இருக்கும், சுயநலம் இருக்காது. நான் மருத்துவமனையில் இருந்தபோது தொந்தரவாக இருந்த கூட்டத்தை 5 நிமிடத்தில் விரட்டி அடித்தவர் விஜயகாந்த். மலேசியா கலை நிகழ்ச்சியில் கூட்டத்தில் சிக்கியபோது களத்தில் இறங்கி என்னை பூ போல் அங்கிருந்து கூட்டி வந்தவர் விஜயகாந்த். வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்களின் மனதில் யார் என்றால் அது விஜயகாந்த் தான். வாழ்க விஜயகாந்த் நாமம்.
தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார்
முன்னதாக தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் : ‛‛அன்பு நண்பர் விஜயகாந்தை இழந்தது மிகப்பெரிய துரதிர்ஷ்டம். மனதுக்கு கஷ்டமாக உள்ளது. அசாத்தியமான மனவுறுதி கொண்ட மனிதர் அவர். எப்படியாவது உடல்நிலை தேறி வந்துவிடுவார்னு என அனைவரும் நினைத்தோம். சமீபத்தில் நடைபெற்ற தேமுதிக பொதுக்குழுவில் அவர் சோர்வாக இருந்ததை பார்த்தபோது, எனக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது, வருந்தினேன். விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார். தமிழ் மக்களுக்கு நிறைய நல்லது செய்திருப்பார். அந்த பாக்கியத்தை தமிழக மக்கள் இழந்திருக்கிறோம்'' என்றார்.