சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
பாலிவுட் சினிமாவின் பிரபலமான நடிகர் வித்யூத் ஜம்வால். தமிழில் ‛துப்பாக்கி, பில்லா 2, அஞ்சான்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது இமயமலையில் நிர்வாணமாக சுற்றியுள்ளார். ஆற்றில் நிர்வாண நிலையில் குளிப்பது போன்றும், சமைப்பது போன்றும் எடுக்கப்பட்ட படங்களை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அதனுடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இமயமலை தெய்வீக தன்மை மிக்கது. ஒவ்வொரு வருடமும் 7 முதல் 10 நாட்கள் வரை அங்கு தனியாகக் கழிப்பது என் வாழ்வின் ஓர் அங்கமாகிவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நிர்வாண படங்களை வெளியிடுவது குழந்தைகள் மனதில் தேவையில்லாமல் மன குழப்பத்தை ஏற்படுத்தும். அதோடு காட்டுப் பகுதியில் தீ மூட்டுவது இந்திய வனச் சட்டம் 1927ன் கீழ் குற்றமாகும். பாலித்தீன் பைகளில் இமயமலையில் அவர் வீசி எரிந்திருப்பது சுற்றுப்புற சூழலை பாதிக்கும் அம்சம். இமயமலையின் எந்த பகுதிக்கு அவர் சென்றார். அதற்கு முறையான அனுமதி பெற்றாரா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.