அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
தமிழ், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளவர் பாயல் ராஜ்புத். தமிழில் 'இருவர் உள்ளம்' என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது 'கோல்மால், ஏஞ்சல்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'மங்களவாரம்' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் 'காந்தாரா' பட இயக்குனர் ரிஷப் ஷெட்டியிடம் 'காந்தாரா சேப்டர் 1' படத்திற்காக ஓபன் ஆக எக்ஸ் தளத்தில் வாய்ப்பு கேட்டிருக்கிறார். “காந்தாரா சேப்டர் 1' படத்திற்கு ஆடிஷன்கள் நடைபெற்று வருகிறது என கேள்விப்பட்டேன். இந்த மதிப்பிற்குரிய படத்தில் பங்கு பெற ஆர்வமாக உள்ளேன். சமீபத்தில் வெளியான 'மங்களவாரம்' படத்தில் எனது நடிப்புக்கு குறிப்பிடத்தக்க பாராட்டுக்கள் கிடைத்தது. இப்படத்தைப் பார்க்க உங்களுக்கு நேரம் கிடைத்தால் மகிழ்வேன். ஆடிஷன் குறித்து ஆலோசனை வழங்கவும் கேட்டுக் கொள்கிறேன். எனது பதிவை மறுபதிவு செய்து இன்னும் முன்னெடுத்துச் செல்வதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பல மொழிகளிலும் நடித்த ஒரு நடிகை இப்படி ஓபன் ஆக வாய்ப்பு கேட்டிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.