ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
தமிழ், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளவர் பாயல் ராஜ்புத். தமிழில் 'இருவர் உள்ளம்' என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது 'கோல்மால், ஏஞ்சல்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'மங்களவாரம்' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் 'காந்தாரா' பட இயக்குனர் ரிஷப் ஷெட்டியிடம் 'காந்தாரா சேப்டர் 1' படத்திற்காக ஓபன் ஆக எக்ஸ் தளத்தில் வாய்ப்பு கேட்டிருக்கிறார். “காந்தாரா சேப்டர் 1' படத்திற்கு ஆடிஷன்கள் நடைபெற்று வருகிறது என கேள்விப்பட்டேன். இந்த மதிப்பிற்குரிய படத்தில் பங்கு பெற ஆர்வமாக உள்ளேன். சமீபத்தில் வெளியான 'மங்களவாரம்' படத்தில் எனது நடிப்புக்கு குறிப்பிடத்தக்க பாராட்டுக்கள் கிடைத்தது. இப்படத்தைப் பார்க்க உங்களுக்கு நேரம் கிடைத்தால் மகிழ்வேன். ஆடிஷன் குறித்து ஆலோசனை வழங்கவும் கேட்டுக் கொள்கிறேன். எனது பதிவை மறுபதிவு செய்து இன்னும் முன்னெடுத்துச் செல்வதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பல மொழிகளிலும் நடித்த ஒரு நடிகை இப்படி ஓபன் ஆக வாய்ப்பு கேட்டிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.