சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

கடந்த 2017ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வெளியான படம் துப்பறிவாளன். அதன்பிறகு அப்படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கப் போவதாக 2019ம் ஆண்டு அறிவித்தார்கள். இங்கிலாந்தில் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்தபோது விஷாலுக்கும் மிஷ்கினுக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அப்படம் கிடப்பில் போடப்பட்டது. அதையடுத்து தானே துப்பறிவாளன்- 2 படத்தை இயக்கி நடிக்கப் போவதாகவும் கூறியிருந்தார் விஷால். என்றாலும் அதன் படப்பிடிப்பு நடத்தப்படாமல் வேறு படங்களில் அவர் நடித்து வந்தார்.
இந்நிலையில் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வரும் ரத்னம் படத்தின் ரிலீசுக்கு பிறகு துப்பறிவாளன்-2 படத்தை இயக்கி நடிக்கப் போவதாக விஷால் கூறிய நிலையில், 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது நடித்து வரும் ரத்னம் படத்தை அடுத்து எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருக்கும் விஷால், துப்பறிவாளன்-2வுக்கு பிறகுதான் புதிய படத்தில் கமிட்டாவார் என்றும் கூறப்படுகிறது.




