ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் | பெல்ஜியம் கார் ரேஸ் : இரண்டாம் இடம் பிடித்த அஜித் அணி |
திரைப்படம் தொடர்பான பல புத்தகங்கள் எழுதியவரும் வசனகர்த்தாவுமான வேலுமணி காலமானார். விஜயகாந்தின் நெருக்கமான நண்பரான அவர் தேவன், எங்கள் ஆசான், விருதகிரி படங்களுக்கு வசனம் எழுதினார். 30 ஆண்டு திரை அனுபவம் கொண்ட வேலுமணி, இயக்குநர் வஸந்தின் 'பூவெல்லாம் கேட்டுப்பார்', 'ரிதம்' உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார்.
55 வயதான வேலுமணி பல்வேறு உடல்நல பிரச்சினையால் பாதிக்கப்பட்டு கடலூரில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். வேலுமணி திருமணம் செய்து கொள்ளவில்லை. தம்பியும், தங்கையும் அவரை கவனித்து வந்தனர்.
விஜயகாந்த்தின் மீது மிகுந்த அன்பு கொண்ட வேலுமணி அவரது உடல்நிலை குறித்தும் மிகுந்த கவலையில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.