அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து |
தெலுங்கு இயக்குனரான ராம் கோபால் வர்மா சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவ்வாக இருப்பவர். சினிமா மட்டுமல்லாது அரசியல் குறித்தும் அடிக்கடி கிண்டல் செய்து பதிவுகளைப் போடுவார். குறிப்பாக தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சித் தலைவர், நடிகர் பவன் கல்யாண் ஆகியோரைக் கடுமையாக விமர்சிப்பார்.
நடைபெற்று முடிந்த தெலங்கானா சட்டசபைத் தேர்தலில் பவன் கல்யாண் கட்சி 8 இடங்களில் போட்டியிட்டது. அதில் ஒரு இடத்தில் கூட டெபாசிட் பெறவில்லை. இது தெலங்கானாவில் பவனின் அரசியல் வாழ்க்கைக்கு மேலும் கேள்விக்குறியாகி உள்ளது. ஆந்திர அரசியலில் மட்டுமே அதிக கவனம் செலுத்துபவர் பவன் கல்யாண். அடுத்து நடைபெற உள்ள ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் என்ன செய்யப் போகிறார் என்பது குறித்து அரசியல் வட்டாரங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
இதனிடையே, தெலங்கானா அரசியலில் படுதோல்வி அடைந்த பவன் கல்யாண் குறித்து இயக்குனர் ராம்கோபால் வர்மா கிண்டலடித்துள்ளார். “கணிதத்தில் ஆர்யபட்டா ஜீரோவைக் கண்டுபிடித்தார். அரசியலில் பவன் கல்யாண் ஜீரோவைக் கண்டுபிடித்துள்ளார்,” என பதிவிட்டுள்ளார். இதனால், அவர் மீது பவன் கல்யாண் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.