300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்திற்குப் பிறகு தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை பிரபலமான நடிகராக மாறிவிட்டார். தற்போது அவரது ஒவ்வொரு படமும் பான் இந்தியா படமாக வெளியாகின்றன. பிரபாஸை ஒரு நல்ல நடிகராக செதுக்கியதில் அவரது நடிப்பு குருவான சத்யானந்த்திற்கு முக்கிய பங்கு உண்டு. இவர் தான் பவன் கல்யாண், மகேஷ் பாபு, ஜெயம் ரவி உள்ளிட்டோரையும் சினிமாவிற்குள் நுழைந்த சமயத்தில் நடிப்பிற்காக பட்டை தீட்டியவர்.
எப்போதுமே தனது குருவிற்கு உரிய மரியாதையை செலுத்தி வரும் நடிகர் பிரபாஸ் தொடர்ந்து சத்யானத் பிறந்தநாளில் தவறாமல் அவரை சந்திப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். சமீபத்தில் அவரது பிறந்தநாளின் போது அவரை சந்தித்து விலை உயர்ந்த வாட்ச் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
இதுகுறித்து பிரபாஸ் கூறும்போது, “இந்த கடிகாரத்தை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். கடிகார செயின் கொஞ்சம் இறுக்கமாக இருந்தால் அதை மகிழ்ச்சியுடன் மாற்றிக் கொடுப்பதற்கு கடைக்காரர்கள் தயாராக இருக்கிறார்கள்” என்று சற்று விளையாட்டாகவும் கமெண்ட் அடித்துள்ளார்.