பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” | அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் | பஹத் பாசிலின் கண்களில் தெரியும் வெறித்தனம் ; சிலாகிக்கும் ராஜமவுலியின் மகன் | தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் | அமிதாப் பச்சனின் தீபாவளி கொண்டாட்டத்தில் மகளுடன் ஆப்சென்ட் ஆன ஐஸ்வர்யா ராய் | ‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் |
தமிழ் படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வருகிறவர் டேனியல் அனி போப். விஜய்சேதுபதியுடன் 'இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தின் மூலம் பிரபலமானார். அதன்பிறகு யாமிருக்க பயமே, மாசு என்கிற மாசிலாமணி, ரங்கூன், ஜருகண்டி, ஜாங்கோ, மாநாடு, ரெய்டு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
டேனியலிடம் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் வாடகைக்கு வீடு தருவதாக கூறி 17 லட்சம் மோசடி செய்துள்ளது. பெங்களூரை சேர்ந்த அந்த நிறுவனத்தின் மீது டேனியல் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது:
“இணைய தளத்தில் வாடகைக்கு வீடு தேடினேன். அப்போது ஒரு நிறுவனம் தங்களிடம் 17 லட்சம் கட்டினால் வீடு பார்த்து தருவதாக தெரிவித்தது. மாதா மாதம் தாங்களே வாடகையை செலுத்தி விடுவதாகவும் இரண்டு வருடங்களுக்கு பிறகு முதலீட்டு தொகையை திருப்பி தந்து விடுவதாகவும் தெரிவித்தனர். அதை நம்பி 17 லட்சம் கொடுத்து போரூரில் உள்ள ஒரு வீட்டுக்கு வாடகைக்கு சென்றேன். அந்த வீட்டில் குடியேறிய 3 மாதங்களுக்கு பிறகு வீட்டு உரிமையாளர் வந்து வாடகை தரவில்லை என்று சொல்லி வீட்டை காலிசெய்யும்படி கூறினார். அப்போதுதான் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். பெங்களூரை சேர்ந்த அந்த நிறுவனம் இப்படி தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்து இருக்கிறேன்'' என்று வீடியோவில் பேசியுள்ளார்.