மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்கமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி நடைபெற்ற போது டிக்கெட் விற்பனையில் நடந்த குளறுபடிகள் காரணமாக, ஏகப்பட்ட குழப்பம், சர்ச்சைகள் நடந்தேறின. குறிப்பாக அந்த நிகழ்ச்சி நடைபெற்ற அன்று சாலையில் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் முதலமைச்சரின் வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இப்படியான நிலையில் இன்று மாலை சென்னையில் உள்ள நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஹாரிஸ் ஜெயராஜின் ராக் ஆன் ஹாரிஸ் என்ற இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ரஹ்மான் இசை நிகழ்ச்சியை போன்று இந்த இசை நிகழ்ச்சியில் குளறுபடி ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக காவல்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்து இருக்கிறது. அதன்படி எத்தனை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. டிக்கெட் ஒவ்வொன்றும் எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது உள்ளிட்ட தகவல்களை காவல்துறைக்கு அளிக்க வேண்டும். குறிப்பாக வாகனங்கள் நிறுத்துவதற்கு சரியான பார்க்கிங் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடக்கூடாது என்று அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களுக்கு காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.