மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
'அண்டே சுந்தரனிகி' படத்தின் இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் மீண்டும் நானி புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இது நானியின் 31வது படமாக உருவாகிறது. இதனை டிவிவி எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும், இந்த படத்தின் தலைப்பு அறிவிப்பு மற்றும் பூஜை நிகழ்ச்சி வருகின்ற அக்டோபர் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே இதில் கதாநாயகியாக நடிக்க நடிகை பிரியங்கா மோகன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து இப்போது இதில் வில்லனாக நடிக்க நடிகர் எஸ்.ஜே. சூர்யா ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்கிறார்கள். இதற்கு முன்பு எஸ்.ஜே. சூர்யா தெலுங்கில் படங்களை இயக்கியுள்ளார். மேலும் ஸ்பைடர் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது கேம் சேஞ்சர் தெலுங்கு படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.