மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
முன்னணி மலையாள நடிகையான லிஜோ மோல் ஜோஷ், 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானாலும் 'ஜெய் பீம்' படம்தான் அவருக்கு புகழை பெற்றுக் கொடுத்தது. அதன் பிறகு 'தீதும் நன்றும்' படத்தில் நடித்தார். தற்போது அன்னபூரணி, காதல் என்பது பொதுவுடமை படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அடுத்து சசிகுமார் ஜோடியாக நடிக்கிறார்.
'கழுகு' படத்தை இயக்கிய சத்ய சிவா 1990களில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. அந்த காலகட்டத்தை பிரதிபலிக்கும் வகையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் செட்டுகள் அமைத்து, படத்தின் காட்சிகளை படக்குழு படமாக்கி வருகிறது.
பாலிவுட் நடிகர் சுதேவ் நாயர் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் 'பருத்தி வீரன்' சரவணன், 'கேஜிஎப்' மாளவிகா, போஸ் வெங்கட், மு.ராமசாமி, ரமேஷ் கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமிழில் ஏராளமான படங்களில் நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ள பாண்டியன் பரசுராம், முதல்முறையாக தனது விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில் இப்படத்தை தயாரித்து வருகிறார்.