சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
தமிழ் சினிமாவில் பிஸியான நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு இன்னொரு பக்கம் நல்ல கதையை அம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து கதையின் நாயகனாகவும் நடித்து வெற்றி பெற்று வருகிறார். இவ்வளவு பிஸியாக இருக்கும் நிலையிலும் தற்போது ஒரு கதாசிரியராக மாறி ஜி.வி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்திற்காக கதை எழுதி வருகிறார் யோகிபாபு.
சமீபத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் கிங்ஸ்டன் என்கிற படத்தின் துவக்க விழா பூஜை நடைபெற்றது. கடல் சார் பின்னணியில் உருவாகும் இந்த திரில்லர் படத்தில் யோகிபாபுவும் அவருடன் இணைந்து முக்கிய இடத்தில் நடிக்கிறார். ஏற்கனவே திரிஷா இல்லைனா நயன்தாரா படத்திலிருந்து ஜிவி பிரகாஷ் உடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார் யோகிபாபு.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் முதன்முதலாக நீங்கள் தயாரிப்பில் இறங்கியுள்ள படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். இந்த படம் மறக்க முடியாத ஒன்றாக இருப்பதற்கு உங்களுடன் சேர்ந்து நானும் பிரார்த்தனை செய்கிறேன். அடுத்ததாக நீங்கள் ஹீரோவாக நடிக்கும் நானும் முக்கிய வேடத்தில் நடிக்கும் நமது இரண்டாவது படத்திற்காக ஒரு கதாசிரியராக ஸ்கிரிப்ட் எழுதிக் கொண்டு இருக்கிறேன். அந்த இரண்டாவது படத்திற்கும் ஆல் த பெஸ்ட் என்று கூறியுள்ளார் யோகிபாபு.