ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ள படம் 'லியோ'.
அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள இப்படத்தின் வியாபாரம் பற்றிய தகவலை கோலிவுட் வட்டாரங்களில் கேட்டோம். இதுவரையில் தமிழ் சினிமா வரலாற்றில் வேறு எந்த ஒரு படத்திற்கும் நடக்காத வியாபாரம் இந்தப் படத்திற்கு நடந்துள்ளதாக ஆச்சரியத்துடன் தெரிவிக்கிறார்கள்.
இப்படத்தின் தமிழக உரிமை மட்டும் 100 கோடிக்கும் அதிகமாக விற்கப்பட்டுள்ளதாம். வெளிநாட்டு உரிமை 60 கோடி, தெலுங்கு மாநில உரிமை 20 கோடி, கர்நாடகா உரிமை 15 கோடி, கேரளா உரிமை 13 கோடி என தியேட்டர்களுக்கான ஏரியா உரிமை மட்டுமே 208 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம்.
படத்தின் சாட்டிலைட் டிவி உரிமை 75 கோடி, ஓடிடி உரிமை 125 கோடி என அதில் மொத்தமாக 200 கோடி வருவாய் வந்துவிட்டதாம். படத்தின் பட்ஜெட்டை இந்த ஒன்றிலேயே எடுத்துவிட்டார்கள் என்கிறார்கள். ஆடியோ உரிமை மூலம் மட்டுமே 15 கோடி ஆரம்பத்திலேயே வந்துவிட்டதாம். ஒட்டு மொத்தமாக 423 கோடி வரையில் 'லியோ' படத்திற்கான வியாபாரம் நடந்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.
டிரைலருக்கு கிடைத்து வரும் வரவேற்பில் படக்குழுவினர் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்களாம். 500 கோடி வசூல் உறுதி என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். ரஜினிகாந்த் நடித்த '2.0' படத்தின் வசூலான 600 கோடி வசூலைக் கடந்து சாதனை படைக்குமா, அதற்கடுத்து 1000 கோடி வரை வசூலித்து புதிய சாதனை படைக்குமா என ரசிகர்களும், திரையுலகத்திலும் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.