சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

தமிழ், தெலுங்கில் நடித்து வருபவர் அஞ்சலி. 2006ம் ஆண்டில் வெளிவந்த தெலுங்குப் படமான 'போட்டோ' படத்திலும், அடுத்து தமிழில் 2007ம் ஆண்டு வெளிவந்த 'கற்றது தமிழ்' படம் மூலமும் அறிமுகமானார்.
தமிழில் தொடர்ந்து 'அங்காடித் தெரு, தூங்கா நகரம், எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, இறைவி, தரமணி, பேரன்பு' ஆகிய படங்கள் மூலம் அதிகமான பாராட்டுக்களைப் பெற்றார். இருப்பினும் தமிழில் அடிக்கடி இடைவெளிவிட்டு நடித்ததால் இன்னும் பெரிய அளவில் பேசப்படாமல் போய்விட்டார்.
தற்போது தமிழில் 'ஏழு கடல் ஏழு மலை' படத்தில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கில் 'கேம் சேஞ்சர்' உள்ளிட்ட இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் 50வது படமான 'கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி' படத்தின் படப்பிடிப்பு நேற்று ஆரம்பமானது.
அது குறித்து, “கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி” படத்தின் மூலம் எனது 50வது படத்தின் படப்பிடிப்பில் அடியெடுத்து வைக்கும் இன்றைய நாளில் ஒரு அபாரமான பயணத்தின் தொடக்கம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 16 ஆண்டுகளாக எனது ஏற்றத் தாழ்வுகளில் பயணித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன். இன்னும் சவாலான எல்லைகளைத் தொட இது என்னை உத்வேகப்படுத்தும்,” என்று குறிப்பிட்டுள்ளார் அஞ்சலி.




