பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தமிழ், தெலுங்கில் நடித்து வருபவர் அஞ்சலி. 2006ம் ஆண்டில் வெளிவந்த தெலுங்குப் படமான 'போட்டோ' படத்திலும், அடுத்து தமிழில் 2007ம் ஆண்டு வெளிவந்த 'கற்றது தமிழ்' படம் மூலமும் அறிமுகமானார்.
தமிழில் தொடர்ந்து 'அங்காடித் தெரு, தூங்கா நகரம், எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, இறைவி, தரமணி, பேரன்பு' ஆகிய படங்கள் மூலம் அதிகமான பாராட்டுக்களைப் பெற்றார். இருப்பினும் தமிழில் அடிக்கடி இடைவெளிவிட்டு நடித்ததால் இன்னும் பெரிய அளவில் பேசப்படாமல் போய்விட்டார்.
தற்போது தமிழில் 'ஏழு கடல் ஏழு மலை' படத்தில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கில் 'கேம் சேஞ்சர்' உள்ளிட்ட இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் 50வது படமான 'கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி' படத்தின் படப்பிடிப்பு நேற்று ஆரம்பமானது.
அது குறித்து, “கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி” படத்தின் மூலம் எனது 50வது படத்தின் படப்பிடிப்பில் அடியெடுத்து வைக்கும் இன்றைய நாளில் ஒரு அபாரமான பயணத்தின் தொடக்கம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 16 ஆண்டுகளாக எனது ஏற்றத் தாழ்வுகளில் பயணித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன். இன்னும் சவாலான எல்லைகளைத் தொட இது என்னை உத்வேகப்படுத்தும்,” என்று குறிப்பிட்டுள்ளார் அஞ்சலி.