‛காட்டி' புரமோஷனுக்கு வராமல் எக்ஸ் தளத்தில் 'சாட்டிங்' மட்டும் செய்த அனுஷ்கா | வெளியான இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் 'கண்ணப்பா' | மேற்கத்திய நாடுகள் பிரச்னையைப் பேசும் 'மதராஸி' | காதலனுக்காக தயாரிப்பாளரான நடிகை | அதிக வேலையால் வாழ்க்கையை இழந்தேன்: ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை | பிளாஷ்பேக்: நறுக் வசனத்தில் முதல் படம் | பிளாஷ்பேக்: முதல் படமே தோல்வி: துவண்டுபோன சவுகார் ஜானகி | பாலா நடித்த காந்திகண்ணாடி படம்: ம.கா.பா ஆனந்த், பிரியங்கா சொன்னது என்ன? | 50 ஆண்டு கொத்தடிமை,, தஞ்சை பின்னணியில் நடக்கும் கதை | மதராஸியை நம்பியிருக்கும் முருகதாஸ் |
இந்தியத் திரையுலகத்தில் ஒரு காலத்தில் 100 கோடி வசூல் என்றாலே ஆச்சரியமாக இருந்தது. இப்போது 500 கோடி வசூல் என்பதை ஓரளவிற்கு அடைய முடிகிறது. அதிலும் அடுத்தடுத்த மாதங்களில் வெளியான இரண்டு படங்கள் 500 கோடி வசூலைப் பெறுவது எல்லாம் அவ்வளவு எளிதில் நடக்கக் கூடிய விஷயமல்ல.
கடந்த மாதம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான தமிழ்ப் படமான 'ஜெயிலர்' படம் தென்னிந்தியா மற்றும் உலக நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்று 500 கோடி வசூலைக் கடந்து 600 கோடிகளைத் தாண்டியும் போய்க் கொண்டிருக்கிறது.
இப்போது ஹிந்திப் படமான 'ஜவான்' படம் நான்கே நாட்களில் 500 கோடி வசூலைக் கடந்துள்ளது. அடுத்து 1000 கோடி வசூலை நோக்கி அந்தப் படம் போகுமா என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
ஆங்கிலத்தில் 'ஜெயிலர், ஜவான்' ஆகிய இரண்டு படங்களையும் எழுதும் போது 'J' என்ற ஆங்கில எழுத்தில்தான் வரும். அதனால், சென்டிமென்ட்டாக திரையுலகினல் இனி 'J' எனத் தொடங்கும் எழுத்தில் படங்களின் பெயர்களைத் தேடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.