பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை |
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். அவரது இயக்கத்தில் தெலுங்கில் 2007ல் வெளிவந்த படம் 'ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே'. வெங்கடேஷ், த்ரிஷா மற்றும் பலர் நடித்த படம். இப்படம்தான் பின்னர் தனுஷ், நயன்தாரா நடிக்க தமிழில் 'யாரடி நீ மோகினி' என்ற பெயரில் ரீமேக் ஆகி வெளிவந்தது.
அப்படம் பற்றி 2013ம் ஆண்டு செல்வராகவன் ஒரு டுவீட் போட்டிருந்தார். அதில், “'ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே' படத்தை நீண்ட இடைவெளிக்குப் பிறகு பார்த்தேன். வெங்கடேஷ், த்ரிஷா ஆகியோருடன் வேலை பார்த்தது சிறப்பானது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் தயார்,” என அப்போது குறிப்பிட்டுள்ளார்.
அந்த டுவீட்டுக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு “நான் ரெடி, செல்வராகவன்” என பதிலளித்துள்ளார் த்ரிஷா. டுவிட்டர் தளத்தில் இவ்வளவு இடைவெளிக்குப் பிறகு ஒருவர் பதிலளித்த டுவீட் இதுவாகத்தான் இருக்கும். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு த்ரிஷாவின் இந்தப் பதிலுக்குப் பலரும் ஆச்சரியம் தெரிவித்துள்ளார்கள்.