நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
நடிகர் பாபி சிம்ஹாவிற்கு கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் 13 சென்ட் நிலம் உள்ளது. இதில், வீடு கட்டி வருகிறார். கட்டுமான பணிகளை கொடைக்கானலைச் சேர்ந்த ஜமீர், காசிம் முகமது செய்து வந்தனர். இவர்களுக்கும், பாபி சிம்ஹாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பணியை முடிக்க வலியுறுத்திய பாபி சிம்ஹாவை, அசிங்கமாக பேசியும், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இவர்களோடு கொடைக்கானலைச் சேர்ந்த உசைன், பேத்துப்பாறையைச் சேர்ந்த மகேந்திரன் சேர்ந்து மிரட்டி உள்ளனர். இவர்கள் மீது கொலை மிரட்டல், ஏமாற்றுதல், அசிங்கமாக பேசுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.