மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

நடிகர் பாபி சிம்ஹாவிற்கு கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் 13 சென்ட் நிலம் உள்ளது. இதில், வீடு கட்டி வருகிறார். கட்டுமான பணிகளை கொடைக்கானலைச் சேர்ந்த ஜமீர், காசிம் முகமது செய்து வந்தனர். இவர்களுக்கும், பாபி சிம்ஹாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பணியை முடிக்க வலியுறுத்திய பாபி சிம்ஹாவை, அசிங்கமாக பேசியும், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இவர்களோடு கொடைக்கானலைச் சேர்ந்த உசைன், பேத்துப்பாறையைச் சேர்ந்த மகேந்திரன் சேர்ந்து மிரட்டி உள்ளனர். இவர்கள் மீது கொலை மிரட்டல், ஏமாற்றுதல், அசிங்கமாக பேசுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.