மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? |
சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் உருவான படம் டான். லைகா நிறுவனம் தயாரித்த இந்த படம் கடந்த ஆண்டு மே மாதம் திரைக்கு வந்து வெற்றி பெற்றது. குறிப்பாக இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களை பலரும் கேலி கிண்டல் செய்து வரும் நிலையில் அந்த மாணவர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கும் வகையில், இந்த படம் உருவாகி இருந்தது. டான் படத்தை அடுத்து ரஜினி நடிக்கும் படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி வந்தன. ஒரு கட்டத்தில் அவர் சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது தெலுங்கு நடிகர் நானியை வைத்து தனது அடுத்த படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் அவர் இயக்கயிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது.