சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் உருவான படம் டான். லைகா நிறுவனம் தயாரித்த இந்த படம் கடந்த ஆண்டு மே மாதம் திரைக்கு வந்து வெற்றி பெற்றது. குறிப்பாக இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களை பலரும் கேலி கிண்டல் செய்து வரும் நிலையில் அந்த மாணவர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கும் வகையில், இந்த படம் உருவாகி இருந்தது. டான் படத்தை அடுத்து ரஜினி நடிக்கும் படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி வந்தன. ஒரு கட்டத்தில் அவர் சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது தெலுங்கு நடிகர் நானியை வைத்து தனது அடுத்த படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் அவர் இயக்கயிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது.