மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1983ல் வெளியான படம் துடிக்கும் கரங்கள். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு எஸ்பி பாலசுப்ரமணியம் இசையமைத்து இருந்தார். தற்போது 40 வருடங்கள் கழித்து இதே பெயரில் நடிகர் விமல் நடிக்கும் படம் தயாராகியுள்ளது. இயக்குனர் வேலுதாஸ் இயக்கியுள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை சமீபத்தில் நடத்தினார்கள்.
ஆனால்
படக்குழுவினர் மட்டுமல்லாது விழாவில் கலந்து கொண்ட சிறப்பு
விருந்தினர்களும் எந்த இடத்திலுமே ரஜினிகாந்த்திற்கு நன்றி தெரிவிக்கும்
விதமாகவோ அவரைப் பற்றியோ எந்த ஒரு வார்த்தையும் குறிப்பிடவில்லை.
பார்வையாளர்களில் ஒருவர்தான் இந்தப் படத்திற்காக ரஜினிகாந்த்திற்கு நன்றி
சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டதை பார்க்க முடிந்தது. ரஜினிகாந்த் பெயரை
வலுக்கட்டாயமாக பொது மேடைகளில் இழுத்து தங்களது படங்களை பலரும் புரமோஷன்
செய்து வரும் நிலையில் அவரது பட டைட்டிலிலேயே ஒரு படத்தை உருவாக்கி விட்டு
அவர் பற்றி ஒரு வார்த்தை கூட துடிக்கும் கரங்கள் படக்குழு பேசாதது
ஆச்சரியம் தான்.