கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1983ல் வெளியான படம் துடிக்கும் கரங்கள். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு எஸ்பி பாலசுப்ரமணியம் இசையமைத்து இருந்தார். தற்போது 40 வருடங்கள் கழித்து இதே பெயரில் நடிகர் விமல் நடிக்கும் படம் தயாராகியுள்ளது. இயக்குனர் வேலுதாஸ் இயக்கியுள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை சமீபத்தில் நடத்தினார்கள்.
ஆனால்
படக்குழுவினர் மட்டுமல்லாது விழாவில் கலந்து கொண்ட சிறப்பு
விருந்தினர்களும் எந்த இடத்திலுமே ரஜினிகாந்த்திற்கு நன்றி தெரிவிக்கும்
விதமாகவோ அவரைப் பற்றியோ எந்த ஒரு வார்த்தையும் குறிப்பிடவில்லை.
பார்வையாளர்களில் ஒருவர்தான் இந்தப் படத்திற்காக ரஜினிகாந்த்திற்கு நன்றி
சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டதை பார்க்க முடிந்தது. ரஜினிகாந்த் பெயரை
வலுக்கட்டாயமாக பொது மேடைகளில் இழுத்து தங்களது படங்களை பலரும் புரமோஷன்
செய்து வரும் நிலையில் அவரது பட டைட்டிலிலேயே ஒரு படத்தை உருவாக்கி விட்டு
அவர் பற்றி ஒரு வார்த்தை கூட துடிக்கும் கரங்கள் படக்குழு பேசாதது
ஆச்சரியம் தான்.