இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1983ல் வெளியான படம் துடிக்கும் கரங்கள். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு எஸ்பி பாலசுப்ரமணியம் இசையமைத்து இருந்தார். தற்போது 40 வருடங்கள் கழித்து இதே பெயரில் நடிகர் விமல் நடிக்கும் படம் தயாராகியுள்ளது. இயக்குனர் வேலுதாஸ் இயக்கியுள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை சமீபத்தில் நடத்தினார்கள்.
ஆனால்
படக்குழுவினர் மட்டுமல்லாது விழாவில் கலந்து கொண்ட சிறப்பு
விருந்தினர்களும் எந்த இடத்திலுமே ரஜினிகாந்த்திற்கு நன்றி தெரிவிக்கும்
விதமாகவோ அவரைப் பற்றியோ எந்த ஒரு வார்த்தையும் குறிப்பிடவில்லை.
பார்வையாளர்களில் ஒருவர்தான் இந்தப் படத்திற்காக ரஜினிகாந்த்திற்கு நன்றி
சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டதை பார்க்க முடிந்தது. ரஜினிகாந்த் பெயரை
வலுக்கட்டாயமாக பொது மேடைகளில் இழுத்து தங்களது படங்களை பலரும் புரமோஷன்
செய்து வரும் நிலையில் அவரது பட டைட்டிலிலேயே ஒரு படத்தை உருவாக்கி விட்டு
அவர் பற்றி ஒரு வார்த்தை கூட துடிக்கும் கரங்கள் படக்குழு பேசாதது
ஆச்சரியம் தான்.