பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
மலையாள நடிகர் துல்கர் சல்மான் தற்போது தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் அளவில் பிரபலமான நடிகராக மாறியுள்ளார். தற்போது மலையாளத்தில் அவர் நடித்துள்ள கிங் ஆப் கோதா என்கிற திரைப்படம் வரும் ஆக-24ஆம் தேதி பான் இந்தியா ரிலீசாக வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தொலைக்காட்சி, யூடியூப், சோசியல் மீடியா என பரபரப்பாக தனது படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார் துல்கர் சல்மான். அப்படி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், வயதான பெண் ஒருவர் தன்னிடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டதால் பொது மேடையில் தான் பட்ட வலியையும் அவஸ்தையையும் மனம் திறந்து கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “பொது நிகழ்வுகளில் என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பும் சில பெண்கள் புகைப்படத்திற்காக நிற்கும் தருணங்களில் எனது தாடையில் கைகளை வைத்து கொஞ்சுவது உள்ளிட்ட சில விரும்பத்தகாத செயல்களை செய்கின்றனர். குறிப்பாக ஒரு சமயம் கொஞ்சம் வயதான பெண் ஒருவர் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக நின்றபோது திடீரென எனது பின்புறத்தில் கிள்ளிவிட்டார். அவரது இந்த எதிர்பாராத செய்கையால் அதிர்ச்சி ஒருபுறம், வலி ஒரு புறம் இருந்தாலும் அதையும் பொருத்துக் கொண்டு சிரித்தபடி போஸ் கொடுத்தேன். எதற்காக சிலர் இப்படி அநாகரிகமாக நடந்து கொள்கிறார்கள் என்று இப்போது வரை புரியவில்லை” என்று கூறியுள்ளார்.