இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி |
பிரபல ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி. ‛சில்ரன் ஆப் ஹெவன், முகம்மது : தி மெசஞ்சர் ஆப் காட், பியாண்ட் தி கிளவுட்ஸ்' உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். சமீபத்தில் இந்தியா வந்த இவர் பாலிவுட் சினிமா பற்றி கூறுகையில், ‛‛இந்தியாவில் திரைப்படம் உருவாக்க சிறந்த திறமையும், ஆற்றலும் உள்ளது. மக்கள் தொகை அதிகம் கொண்ட நாட்டில் இங்கு சொல்லப்பட வேண்டிய கதைகள், கலாச்சாரங்கள் அதிகம் உள்ளன. ஆனால் பாலிவுட் அதை சரியாக பயன்படுத்தவில்லை. பாலிவுட் தன்னை மேம்படுத்தவில்லை என்றால் எதிர்காலத்தில் பிரச்னை தான்.
இன்றைக்கு மக்கள் சமூகவலைதளங்கள் மூலம் அனைத்து விஷயங்களையும் உடனடியாக தெரிந்து கொள்கின்றனர். இப்போது எடுப்பது போன்று இன்னும் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தால் எதிர்காலத்தில் ரசிகர்கள் இருக்க மாட்டார்கள். ஆகவே பாலிவுட் தன்னை மாற்றிக் கொண்டு ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்றபடி படங்களை கொடுக்க வேண்டும். இப்படி சொல்வதால் நான் பாலிவுட்டிற்கு எதிரானவன் அல்ல. அவர்கள் மாற வேண்டும் என்பதற்காக சொல்கிறேன். நிறைய திறமையான இளம் கலைஞர்கள் உள்ளனர். அவர்கள் பல அற்புதங்களை நிகழ்த்துவார்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.