புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் ‛கங்குவா' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. திஷா பதானி, நட்டி எனும் நட்ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பன்மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது. இதை முடித்த பின்னர் சுதா இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க போகிறார்.
நடிகர் சூர்யா சென்னையில் உள்ள தனது பெற்றோரை பிரிந்துவிட்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் செட்டிலாகிவிட்டதாக தொடர்ந்து செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் சென்னை வந்த சூர்யா தனது ரசிகர்களை சந்தித்தார். அப்போது அவர்களிடம் பேசிய அவர், ‛‛நான் மும்பையில் செட்டிலாகிவிட்டதாக வரும் செய்தி உண்மையில்லை. எனது பிள்ளைகள் தியா, தேவ் ஆகியோர் மும்பையில் படிக்கின்றனர். அவர்களை பார்க்க அடிக்கடி சென்று வருகிறேன். மற்றபடி நான் சென்னையில் தான் இருக்கிறேன்'' என்றார்.