புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
பாலிவுட் நடிகை கியாரா அத்வானி சமீபத்தில் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் கியாரா அத்வானி. தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்து வருகிறார்.
சமீப காலமாக அதிகமாக சினிமாவில் பேசப்படும் விஷயம் நடிகர்-நடிகைகளின் சம்பள விஷயம் தான். இப்போது இது குறித்து கியாரா அத்வானி தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். அதன்படி, "சம்பளம் விஷயத்தில் ஹீரோக்கள் விட ஹீரோயின்கள் குறைவான சம்பளமே பெறுகிறார்கள். இது குறித்து நீண்ட வருடங்களாக பேசி வந்தாலும் எந்தவித பிரயோஜனமும் இல்லை. நமது திறமையை பொறுத்து தான் சம்பளம் நிர்ணயிப்பார்கள். ஹீரோயின்கள் எந்தளவு ரசிகர்களை கவர்வார்கள் என்பதை பொறுத்து தான் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அதனால் நடிகைகள் தங்கள் நடிப்பு திறமையை அதிகப்படுத்தி கொள்ள வேண்டும். அதேபோல் நமது திறமைக்கு யார் அதிக மதிப்பு தருகிறார்களோ அவர்களுடன் இணைந்து பணியாற்ற முயற்சி செய்ய வேண்டும். அப்போது சம்பள விஷயத்தை பற்றி யோசிக்க வேண்டிய அவசியமே இருக்காது". என தனது கருத்துக்களை முன்வைத்து ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளார்.