அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் |

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் ' ஜெயிலர்'. அனிரூத் இசையில் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப் என மூன்று மொழி ஸ்டார்கள் நடித்திருந்தனர்.
இந்த நிலையில் நெல்சன் ஒரு பேட்டியில், "தெலுங்கில் இருந்து பாலகிருஷ்ணா சாரை நடிக்க வைக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். இதில் ஒரு பவர்புல் போலீஸ் கதாபாத்திரம் இருந்தது. அதில் நடிக்க வைக்க நினைத்தேன். ஆனால், அந்த கதாபாத்திரத்தை சரியாக வடிவமைக்க முடியவில்லை. அதனால் பாலகிருஷ்ணா உடன் இதுகுறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.