தரன் தரும் தரமான இலக்கியம் | பிளாஷ்பேக்: காலம் கடந்தும் பேசப்படும் காவியப் படைப்பு “கண்ணகி” | ஜோதிடத்தை நம்பி படத்தை போட்ட வம்பு நடிகர் | கதை கேட்காமல் நடித்தேன்: 'சர்ப்ரைஸ்' தரும் சாயாதேவி | கந்தன் கருணை, ஆழ்வார், சர்கார் - ஞாயிறு திரைப்படங்கள் | தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு |
கடந்த 2014ல் ரஜினிகாந்த் நடிப்பில் கோச்சடையான் என்கிற திரைப்படம் வெளியானது. ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யா இயக்கிய இந்த படம் முழுக்க முழுக்க அனிமேஷன் முறையில் உருவாக்கப்பட்டது. தீபிகா படுகோனே, சரத்குமார், ஜாக்கி ஷெராப், ஆதி பினிஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். படம் வெளியான பின்பு வியாபராம் தொடர்பான சில கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் எழுந்து, அதன் பிறகு அமுங்குவது வாடிக்கையாக இருந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான முரளி மனோகர் இந்த படத்தின் அனிமேஷன் பணிகளை கவனித்த நிறுவனத்திற்கு பட உரிமையில் 20 சதவீதமும், 12 சதவீத கமிஷன் தொகையும் அளிப்பதாக கூறி 5 கோடி ரூபாய்க்கான காசோலையை 2014ல் வழங்கி உள்ளார். ஆனால் அப்படி அளிக்கப்பட்ட காசோலையை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லை என திரும்பியது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனம், முரளி மனோகர் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தது. தற்போது இந்த வழக்கில் முரளி மனோகருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது கீழமை நீதிமன்றம்.