லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‛ஜெயிலர்' படம் நேற்று(ஆக., 10) உலகமெங்கும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. படம் வெளியாவதற்கு முதல்நாள் ரஜினி, இமயமலை பயணத்திற்காக புறப்பட்டு சென்றார். சென்னையிலிருந்து பெங்களூரு சென்ற ரஜினி அங்கிருந்து தனது நண்பர்களுடன் இமயமலை புறப்பட்டார்.
இந்த பயணத்தின் முதல்நாளில் உத்தரகண்ட் மாநிலம், ரிஷிகேஷ் சென்றார் ரஜினி. சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்றவர் அங்குள்ள துறவிகளை சந்தித்து அவர்களிடம் ஆசி பெற்றார். அவர்களின் சொற்பொழிவையும் கேட்டு மகிழ்ந்தார். அவரும் சொற்பொழிவு ஆற்றினார். பின்னர் அவர்களுக்கு உணவு அளித்தார். ரிஷிகேஷில் உள்ள சில கோயில்களுக்கும் சென்று வழிபட்டார். இதுதொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலானது.