நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? | காக்கா கழுகு போய்... கழுதை கதை சொன்ன ரஜினி : ‛வேட்டையன்' இசை வெளியீட்டில் சுவாரஸ்யம் | மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! |
சந்தானம் ஹீரோவாக நடித்த பின் அவருக்கு கமர்ஷியல் ரீதியாக பெரிய வெற்றியை தந்த படம் ‛தில்லுக்கு துட்டு'. இந்த படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது மூன்றாம் பாகமும் ‛டிடி ரிட்டர்ன்ஸ்' என்ற பெயரில் உருவாகி உள்ளது. நாயகியாக சுரபியும் முக்கிய வேடங்களில் ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். பிரேம் ஆனந்த் இயக்கி உள்ளார்.
இப்பட விழாவில் பேசிய நடிகர் சந்தானம், “நான் நடித்த சில படங்கள் சந்தானம் படம் போல இல்லையே என்று சொன்னார்கள். ஆனால் இந்த 'டிடி ரிட்டர்ன்ஸ்' படத்தை முழுக்க முழுக்க சந்தானம் படமாக உருவாக்கி உள்ளோம். தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டு பாகங்கள் வெற்றி பெற்றன. அதேபோல இந்தப் படமும் மக்களின் மனங்களை கவரும் என நம்புகிறேன். இதில் வரும் ஒவ்வொரு பேய் கதாபாத்திரமும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் பார்த்து ரசிக்கும் வண்ணம் இப்படத்தை பிரேம் ஆனந்த் உருவாக்கியுள்ளார்” என்று சந்தானம் பேசினார்.