அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து வந்தவர் ஜெனிலியா. ஹிந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் நடிப்பை கைவிட்ட இவர் இப்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் தென்னிந்திய சினிமா குறித்து பேசி உள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛நடிப்பின் மீது எனக்கு காதல் வர காரணமே தென்னிந்திய சினிமா தான். தென்னிந்திய சினிமா எனக்கு நிறைய அன்பான ரசிகர்களையும் தந்தது. நான் தென்னிந்திய படங்களில் நடித்த போது பாலிவுட் வாய்ப்பு வந்தது. இருப்பினும் இங்கு நடித்ததால் பாலிவுட் என்னை கைவிட்டதோடு அங்கேயே செல் என்று கூறியது. தென்னிந்திய படங்களில் மீண்டும் நடிக்கும் ஆசை உள்ளது. நல்ல கதையும், கதாபாத்திரமும் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன்'' என்றார்.