மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து வந்தவர் ஜெனிலியா. ஹிந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் நடிப்பை கைவிட்ட இவர் இப்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் தென்னிந்திய சினிமா குறித்து பேசி உள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛நடிப்பின் மீது எனக்கு காதல் வர காரணமே தென்னிந்திய சினிமா தான். தென்னிந்திய சினிமா எனக்கு நிறைய அன்பான ரசிகர்களையும் தந்தது. நான் தென்னிந்திய படங்களில் நடித்த போது பாலிவுட் வாய்ப்பு வந்தது. இருப்பினும் இங்கு நடித்ததால் பாலிவுட் என்னை கைவிட்டதோடு அங்கேயே செல் என்று கூறியது. தென்னிந்திய படங்களில் மீண்டும் நடிக்கும் ஆசை உள்ளது. நல்ல கதையும், கதாபாத்திரமும் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன்'' என்றார்.