அஜித் மார்பில் அம்மன் டாட்டூ : பக்திப் பரவசத்தில் ரசிகர்கள் | பாலிவுட் என்று அழைக்காதீர்கள் : ஜெயா பச்சன் காட்டம் | சர்ச்சையை ஏற்படுத்திய 'இந்தியாவின் பிக்கஸ்ட் சூப்பர் ஸ்டார்' | ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் |

தெலுங்கில் சில நாட்களுக்கு முன்பு சாய் ராஜேஷ் இயக்கத்தில் ஆனந்த் தேவரகொண்டா, வைஷ்ணவி சைதான்யா உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த படம் பேபி. இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று உலகளவில் ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்து வருகிறது. இந்த நிலையில் பேபி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதில் கதாநாயகியாக நடித்த வைஷ்ணவி சைதான்யா, தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களான சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ், கீதா ஆர்ட்ஸ், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சினிமா வட்டாரங்களில் அதிக படங்களில் நடிக்கும் அடுத்த ஸ்ரீ லீலாவாக வைஷ்ணவி வருவார் என பேசப்படுகிறது. இதற்கு முன்பு வைஷ்ணவி தமிழில் அஜித் நடித்த வலிமை படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




