‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
குஷி படத்தை முடித்துவிட்ட நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது பரசுராம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை மிருணாள் தாகூர் நடிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். கோபி சுந்தர் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. இதையடுத்து அமெரிக்காவில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. 2024 பொங்கலுக்கு இப்படம் வெளியாகிறது. இந்த படத்தில் மிருணாள் தாகூர் அல்லாமல் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக இன்னொரு கதாநாயகி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதில் திவ்யன்ஷா கவுசிக் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு மஜிலி, மைக்கேல் போன்ற படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.