பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
1995ம் ஆண்டு 'சந்திரலேகா' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் வனிதா விஜயகுமார், அதன்பிறகு ராஜ்கிரணுடன் நடித்த மாணிக்கம் படத்தின் மூலம் பிரபலமானார். அதன்பிறகு சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்பு இல்லாமல் ஒதுங்கி இருந்தார். பின்னர் மீண்டும் சினிமாவுக்கு திரும்பி குணசித்தர வேடங்கள், வில்லி வேடங்களில் நடித்தார்.
இந்த நிலையில் தற்போது 'கடைசி தோட்டா' என்ற படத்தில் ஹீரோயினாக அதுவும் டெரர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஆர்.வி.ஆர் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை நவீன் இயக்குகிறார். அவருடன் ராதாரவி, ஸ்ரீகுமார் வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். வி.ஆர்.சுவாமிநாதன் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மர்டர் மிஸ்ட்ரி ஜார்னரில் படம் தயாராகி வருகிறது. மலைப்பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடக்கும் தொடர் கொலைகளை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக வனிதா நடிக்கிறார்.