ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
1995ம் ஆண்டு 'சந்திரலேகா' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் வனிதா விஜயகுமார், அதன்பிறகு ராஜ்கிரணுடன் நடித்த மாணிக்கம் படத்தின் மூலம் பிரபலமானார். அதன்பிறகு சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்பு இல்லாமல் ஒதுங்கி இருந்தார். பின்னர் மீண்டும் சினிமாவுக்கு திரும்பி குணசித்தர வேடங்கள், வில்லி வேடங்களில் நடித்தார்.
இந்த நிலையில் தற்போது 'கடைசி தோட்டா' என்ற படத்தில் ஹீரோயினாக அதுவும் டெரர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஆர்.வி.ஆர் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை நவீன் இயக்குகிறார். அவருடன் ராதாரவி, ஸ்ரீகுமார் வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். வி.ஆர்.சுவாமிநாதன் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மர்டர் மிஸ்ட்ரி ஜார்னரில் படம் தயாராகி வருகிறது. மலைப்பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடக்கும் தொடர் கொலைகளை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக வனிதா நடிக்கிறார்.