அயோத்தியில் நான்காவது 'மனை' வாங்கிய அமிதாப்பச்சன் | தெலங்கானா மாநில சினிமா விருது வென்ற எஸ்ஜே சூர்யா, நிவேதா தாமஸ் | கமல் சாரை பற்றி தப்பா பேசாதீங்க! - சர்ச்சை குறித்து ஆவேசமாக பேசிய சிவராஜ்குமார் | கார்த்தியின் 'கைதி- 2' படப்பிடிப்பு: டிசம்பர் மாதத்தில் தொடங்குகிறது! | அபிஷன் ஜீவிந்த் மூலம் எனக்கு கிடைத்த புகழ்! - சசிகுமார் நெகிழ்ச்சி | சூர்யா 45வது படம் பண்டிகை நாளில் வெளியாகும்! - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தகவல் | பெங்களூரு காவல் நிலையத்தில் கமல்ஹாசன் மீது புகார்! வழக்கை பதிவு செய்யாத போலீசார் | 'பாஸ் என்கிற பாஸ்கரன் 2' வருமா? | ஹீரோயினை விட ஒரு பாடலுக்கு ஆடும் ராஷ்மிகாவுக்கு அதிக சம்பளம் | நிதிஅகர்வாலுடன் நடித்தால் துணை முதல்வரா? |
நடிகை ராஷ்மிகா மந்தனாவை போலவே அவருக்கு அடுத்ததாக குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற நடிகை என்றால் அது கிர்த்தி ஷெட்டி தான். தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் இளம் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் இவர் மலையாளத்திலும் அடியெடுத்து வைத்து வரலாற்று படம் ஒன்றில் நடித்து வருகிறார். 2 மாதங்களுக்கு முன்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கஸ்டடி படத்தில் நடித்திருந்தார் கிர்த்தி ஷெட்டி.
இந்த நிலையில் சில தினங்களாக கிர்த்தி ஷெட்டியை பிரபல வாரிசு நடிகர் ஒருவர் தனது கட்டுப்பாட்டிற்குள் வைக்க முயற்சிப்பதாகவும் தான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் தன்னுடன் கம்பெனி கொடுக்க வேண்டும் என துன்புறுத்துவதாகவும் செய்திகள் வெளியாகின. தற்போது கிர்த்தி ஷெட்டியே இந்த செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று தனது சோசியல் மீடியா பக்கம் மூலமாக விளக்கம் அளித்துள்ளார்.
“கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படி ஒரு செய்தி வெளியானபோதே பார்த்தேன்.. தானாகவே அது அமுங்கி போய்விடும் என்று நினைத்தால் அது பெரிய அளவில் பரவ ஆரம்பித்தது. இதற்கு இத்தோடு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தான் இந்த பதிவை இட்டுள்ளேன். அதில் சொல்லப்பட்ட செய்திகள் எதுவுமே உண்மை இல்லை.. எல்லாமே இட்டுக்கட்டப்பட்ட கட்டுக் கதைகள்” என்று கூறியுள்ளார் கிர்த்தி ஷெட்டி.