ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி |

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்திருந்த திரிஷா, அதையடுத்து விஜய்யுடன் லியோவை தொடர்ந்து ‛தி ரோடு' என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வந்தார். ஆக்ஷன் திரில்லர் கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் திரிஷாவுடன் டான்சிங் ரோஸ் சபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ்.பாஸ்கர், பிரசன்னா, லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் இந்த படத்தை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
இந்நிலையில் ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து தொடங்க உள்ள புரமோஷன் நிகழ்ச்சிகளில் திரிஷாவும் கலந்து கொள்வதற்கு திட்டமிட்டுள்ளார். இந்த படம் மதுரையில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையில் உருவாகி இருப்பதாக தெரிவித்துள்ள இயக்குனர் அருண் வசீகரன், விரைவில் இப்படத்தின் டீசர் வெளியாக இருப்பதாகவும் கூறுகிறார்.