வீர தீர சூரன் 2 : அடுத்த வாரம் ஓடிடி ரிலீஸ் | ஆங்கிலத்தில் பேசச் சொன்ன தொகுப்பாளர் : தமிழில்தான் பேசுவேன் என்ற அபிராமி | முதல் பட ஹீரோ ஸ்ரீ-க்கு ஆதரவாக லோகேஷ் கனகராஜ் | மொழிப்போர் நடக்குற நேரம்... இது எங்க மும்மொழித் திட்டம் : தக் லைப் பட விழாவில் கமல் பேச்சு | 'மண்டாடி' : சூரியின் அடுத்த படம் | மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ... தவறான தகவல்களை பரப்பாதீங்க.... : குடும்பத்தினர் அறிக்கை | என்னை பற்றி என் தயாரிப்பாளர்களிடம் கேளுங்கள்: பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் | பிளாஷ்பேக் : மம்பட்டியான் பாணியில் உருவான கொம்பேறி மூக்கன் | தன்னை போன்று குறைபாடு உடையவரையே மணந்த அபிநயா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனி இசை அமைக்கும் இன்னொரு தமிழர் |
'காதலில் சொதப்புவது எப்படி' படத்தின் மூலம் பாலாஜி மோகன் இயக்குனராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடித்த 'வாயை மூடி பேசவும்', தனுஷ் மற்றும் காஜல் அகர்வால் நடித்த 'மாரி', தனுஷ், சாய்பல்லவியின் நடிப்பில் மாரி 2 ஆகிய படங்களை இயக்கினார். அதோடு மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் தேசிய விருது பெற்ற 'மண்டேலா' படத்தையும் தயாரித்தார்.
பாலாஜி மோகன் 2012ம் ஆண்டு தனது முதல் படத்தை இயக்கும் போது அருணா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அருணாவை விவாகரத்து செய்தார். இந்தநிலையில் தெலுங்கு நடிகை கல்பிகா கணேஷ், பாலாஜி மோகன், நடிகை தன்யா பாலகிருஷ்ணாவை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவலை வெளியிட்டு பாலாஜி மோகன் மீதும், தன்யா மீதும் விமர்சனங்கள் வைத்தார்.
இதைத் தொடர்ந்து பாலாஜி மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தனக்கும தன்யா பாலகிருஷ்ணனுக்கும் திருமணம் நடந்தது, இது எனது தனிப்பட்ட விஷயம். ஆனால் நடிகை கல்பிகா கணேஷ் எங்களை பற்றி அவதூறாக பேசி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதை தொடர்ந்து தன்யா பாலகிருஷ்ணா குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த கல்பிகா கணேஷுக்கு நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கல்பிகா கணேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தான்யா குறித்து கல்பிகா வெளியிட்ட பதிவுகளை நீக்கி விட்டார். அதோடு இதற்காக மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். எனவே வழக்கை முடித்து வைக்க கேட்டுக் கொண்டார். இதை தொடர்ந்து கல்பிகா மன்னிப்பு கேட்ட வீடியோவை நீக்க கூடாது என்ற நிபந்தனையுடன் வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.