எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
புதுமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன், சரத்குமார் இணைந்து நடித்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் போர் தொழில். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவான இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். விமர்சகர்கள் மற்றும் மக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து இந்த படம் கேரளா மற்றும் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் இன்று சென்னையில் போர் தொழில் படக்குழுவினர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது இப்படத்தின் விநியோகஸ்தர் மேடையில் " இந்த படம் உலகளவில் ரூ. 50 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது" என கூறியுள்ளார். அதேபோல் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.25 கோடி வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதான் அசோக் செல்வன் சினிமா வாழ்க்கையில் அதிகபட்ச வசூலித்த செய்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.