தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. தயாரிப்பாளர் தகவல்! | விஷாலுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள்! | பிரேம் குமார், பஹத் பாசில் படம்... "இன்னொரு ஆவேசம்" தயாரிப்பாளர் தந்த சூப்பர் அப்டேட்! | அருள்நிதி, முத்தையா கூட்டணியில் ‛ராம்போ'.. புதிய பட அறிவிப்பு! | ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் வெளியீட்டை தள்ளி வைக்கும் விஜய்! | ‛காந்தாரா: சாப்டர் 1' படத்திற்காக 3 ஆண்டுகள் அர்ப்பணிப்பு: ரிஷப் ஷெட்டி | கல்கி -2 படத்தில் தீபிகா படுகோனேவுக்கு பதிலாக இணையும் சாய் பல்லவி! | புலம்பும் புயல் காமெடியன் | ராதிகா தாயார் மறைவு: நேரில் சென்று ஆறுதல் சொன்ன பாரதிராஜா | பிளாஷ்பேக்: தென்னிந்தியத் திரையுலகின் முதல் பெண் இயக்குநர் 'சினிமா ராணி' டி பி ராஜலக்ஷ்மி இயக்கிய 'மிஸ் கமலா' |
புதுமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன், சரத்குமார் இணைந்து நடித்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் போர் தொழில். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவான இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். விமர்சகர்கள் மற்றும் மக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து இந்த படம் கேரளா மற்றும் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் இன்று சென்னையில் போர் தொழில் படக்குழுவினர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது இப்படத்தின் விநியோகஸ்தர் மேடையில் " இந்த படம் உலகளவில் ரூ. 50 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது" என கூறியுள்ளார். அதேபோல் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.25 கோடி வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதான் அசோக் செல்வன் சினிமா வாழ்க்கையில் அதிகபட்ச வசூலித்த செய்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.