எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை |

புதுமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன், சரத்குமார் இணைந்து நடித்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் போர் தொழில். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவான இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். விமர்சகர்கள் மற்றும் மக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து இந்த படம் கேரளா மற்றும் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் இன்று சென்னையில் போர் தொழில் படக்குழுவினர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது இப்படத்தின் விநியோகஸ்தர் மேடையில் " இந்த படம் உலகளவில் ரூ. 50 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது" என கூறியுள்ளார். அதேபோல் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.25 கோடி வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதான் அசோக் செல்வன் சினிமா வாழ்க்கையில் அதிகபட்ச வசூலித்த செய்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.