பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
கன்னட சினிமாவை சேர்ந்த இளம் நடிகர் சூரஜ் குமார்(24). கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் உறவினரான இவர் மைசூரில் இருந்து ஊட்டிக்கு பைக்கில் சென்றுள்ளார். மைசூர் - குண்ட்லுப்பேட்டை நெடுஞ்சாலையில் பேகுர் என்ற இடம் அருகே டிராக்டரை முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர், மைசூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இவரது உயிரை காப்பாற்றும் பொருட்டு பலத்த காயமடைந்த அவரின் வலது காலை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றினர்.
சூரஜ் குமார் சினிமாவிற்காக தனது பெயரை துருவன் என மாற்றினார். அவர் நடித்துள்ள 'பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா' என்ற படம் சில பிரச்னைகளால் ரிலீஸாவதில் தாமதமாகி உள்ளது. அடுத்து சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த சூழலில் அவர் கால்களை இழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் கன்னட திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.