பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி நடித்து வரும் கங்குவா படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. சூர்யா இதுவரை நடித்த படங்களில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகிறது. இதில் சூர்யா 10க்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார். இப்படியான நிலையில் தற்போது கங்குவா படத்தின் பாடல் காட்சி ஒன்று கொடைக்கானலில் படமாக்கப்பட்டு உள்ளது. சூர்யாவுடன் இணைந்து 500க்கும் அதிகமான நடன கலைஞர்கள் இடம் பெற்ற இந்த பாடல் காட்சிக்கு ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டுக்கூத்து என்ற பாடலுக்கு நடனம் அமைத்த பிரேம் ரக்ஷித் நடனம் அமைத்துள்ளார். ஆஸ்கர் விருது பெற்ற பாட்டுக்கு நடனம் அமைத்தவர், சூர்யா பட பாடலுக்கும் நடனம் அமைத்திருப்பதால் இந்த பாடலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.