கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
கோபிசந்த், ராஷி கண்ணா நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான 'ஜில்' என்ற தெலுங்கு படம் மூலம் நடிகரானவர் கபீர் துஹான் சிங். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த 'வேதாளம்' படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தார். வேதாளத்தை அடுத்து றெக்க, காஞ்சனா 3, அருவம், ஆக்ஷன், தெற்கத்தி வீரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது மாராத்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
கபீர் துஹான் சிங்கிற்கும், அவரது உறவுக்கார பெண்ணான ஹரியானாவை சேர்ந்த ஆசிரியை சீமா சாஹலுக்கும் திருமணம் நடந்தேறியுள்ளது. டில்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இவர்களது திருமணம் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
திருமண படங்களை வெளியிட்டுள்ள கபீர் சிங் “இது காதல் திருமணம் அல்ல, பெரியவர்கள் பார்த்து முடிவு செய்த திருமணம். எனது குடும்பம் பெரியது. அதனை தலைமையேற்று கவனித்துக் கொள்ளவும், எனது தொழிலை புரிந்து கொண்டு எனக்கு துணையாக இருக்கவும் ஒரு பெண்ணை விரும்பினேன். அப்படியொரு பெண்ணை எனக்காக தேர்வு செய்திருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.