துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
கோபிசந்த், ராஷி கண்ணா நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான 'ஜில்' என்ற தெலுங்கு படம் மூலம் நடிகரானவர் கபீர் துஹான் சிங். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த 'வேதாளம்' படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தார். வேதாளத்தை அடுத்து றெக்க, காஞ்சனா 3, அருவம், ஆக்ஷன், தெற்கத்தி வீரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது மாராத்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
கபீர் துஹான் சிங்கிற்கும், அவரது உறவுக்கார பெண்ணான ஹரியானாவை சேர்ந்த ஆசிரியை சீமா சாஹலுக்கும் திருமணம் நடந்தேறியுள்ளது. டில்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இவர்களது திருமணம் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
திருமண படங்களை வெளியிட்டுள்ள கபீர் சிங் “இது காதல் திருமணம் அல்ல, பெரியவர்கள் பார்த்து முடிவு செய்த திருமணம். எனது குடும்பம் பெரியது. அதனை தலைமையேற்று கவனித்துக் கொள்ளவும், எனது தொழிலை புரிந்து கொண்டு எனக்கு துணையாக இருக்கவும் ஒரு பெண்ணை விரும்பினேன். அப்படியொரு பெண்ணை எனக்காக தேர்வு செய்திருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.