முதல் பட ஹீரோ ஸ்ரீ-க்கு ஆதரவாக லோகேஷ் கனகராஜ் | மொழிப்போர் நடக்குற நேரம்... இது எங்க மும்மொழித் திட்டம் : தக் லைப் பட விழாவில் கமல் பேச்சு | 'மண்டாடி' : சூரியின் அடுத்த படம் | மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ... தவறான தகவல்களை பரப்பாதீங்க.... : குடும்பத்தினர் அறிக்கை | என்னை பற்றி என் தயாரிப்பாளர்களிடம் கேளுங்கள்: பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் | பிளாஷ்பேக் : மம்பட்டியான் பாணியில் உருவான கொம்பேறி மூக்கன் | தன்னை போன்று குறைபாடு உடையவரையே மணந்த அபிநயா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனி இசை அமைக்கும் இன்னொரு தமிழர் | அர்ஜுன் இளைய மகளுக்கு டும் டும் : இத்தாலி தொழில் அதிபரை மணக்கிறார் | பிளாஷ்பேக்: நாரதராக வாழ்ந்த நாகர்கோவில் மகாதேவன் |
தெலுங்கு படங்களில் அறிமுகமாகி நடித்து வந்த சித்தி இத்னானி, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'வெந்து தணிந்தது காடு' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதில் அவர் சிம்பு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு பரபரப்பை ஏற்படுத்திய 'தி கேரளா ஸ்டோரி' படத்தில் நடித்தார். கடைசியாக 'காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம்' படத்தில் நடித்தார். சசி இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண் ஜோடியாக 'நூறு கோடி வானவில்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் இன்னும் வெளிவரவில்லை.
இந்நிலையில் சித்தி திடீரென சமூக சேவையில் இறங்கி உள்ளார். மும்பையில் உள்ள லிட்டில் ஏஞ்சல் என்கிற மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பள்ளிக்குச் சென்று பரிசுகள் வழங்கிய புகைப்படங்களைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ''நீங்கள் ஒருவருக்கு பரிசளிக்கக்கூடிய சிறந்த விஷயம், உங்கள் நேரம். லிட்டில் ஏஞ்சல்ஸில் உள்ள மனநலம் குன்றிய குழந்தைகளுடன் மதிய நேரத்தை செலவிட்டேன். அவர்கள் முகத்தில் இருக்கும் புன்னகை விலைமதிப்பில்லாதது” என்று பதிவிட்டுள்ளார்.