இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

தெலுங்கு படங்களில் அறிமுகமாகி நடித்து வந்த சித்தி இத்னானி, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'வெந்து தணிந்தது காடு' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதில் அவர் சிம்பு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு பரபரப்பை ஏற்படுத்திய 'தி கேரளா ஸ்டோரி' படத்தில் நடித்தார். கடைசியாக 'காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம்' படத்தில் நடித்தார். சசி இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண் ஜோடியாக 'நூறு கோடி வானவில்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் இன்னும் வெளிவரவில்லை.
இந்நிலையில் சித்தி திடீரென சமூக சேவையில் இறங்கி உள்ளார். மும்பையில் உள்ள லிட்டில் ஏஞ்சல் என்கிற மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பள்ளிக்குச் சென்று பரிசுகள் வழங்கிய புகைப்படங்களைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ''நீங்கள் ஒருவருக்கு பரிசளிக்கக்கூடிய சிறந்த விஷயம், உங்கள் நேரம். லிட்டில் ஏஞ்சல்ஸில் உள்ள மனநலம் குன்றிய குழந்தைகளுடன் மதிய நேரத்தை செலவிட்டேன். அவர்கள் முகத்தில் இருக்கும் புன்னகை விலைமதிப்பில்லாதது” என்று பதிவிட்டுள்ளார்.